🚘 டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விடப் போவதாக பெட்ரோல்-டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
🚛 இதுகுறித்து அந்த கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பதாவது:
🔸 டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அளித்த வாக்குறுதியை அடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றோம். எனினும், எண்ணெய் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்து 4 மாதங்களாகி விட்ட பிறகும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
🔹 எனவே, மே மாதம் 10-ஆம் தேதி முதல், எங்களது கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் வரையிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்துள்ளோம். அத்துடன்,
🔸 மே மாதம் 10-ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதென்றும் தீர்மானித்துள்ளோம்.
🔹 மே மாதம் 10-ஆம் தேதியன்று, கொள்முதல் இல்லாத தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம் என்று பெட்ரோல்-டீசல் விற்பனை மைய கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்