February 10, 2017

CEO வேண்டாம் PA போதும் TRB...


சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. 


இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. 

இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.

இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்