சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி நிர்வாகத்தில் செயல்படுகிறது. இங்கு, ஏராளமான
ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இருந்ததால், அவர்களுக்கு சம்பளம் வழங்க, அரசால் முடியவில்லை. எனவே, உபரியாக இருப்போர், இடம் மாற்றப்படுகின்றனர். 2016ல், 367 பேராசிரியர்கள், அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.
தற்போதைய நிலையில், பேராசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு, மாதம், 50 கோடி ரூபாய் வரை, ஒதுக்கப்படுகிறது.பல்கலையின் பல்வேறு துறைகளில், 1,080 பேராசிரியர்கள், 4,722 ஊழியர்கள் கூடுதலாக உள்ளதை, பல்கலை கண்டறிந்துள்ளது. இவர்களை, மற்ற அரசு கல்லுாரிகளுக்கு மாற்றினால், மாதம், 19.52 கோடி ரூபாய் மீதமாகும் என, உயர்கல்வித் துறை கணக்கிட்டுள்ளது. ஆனால், பேராசிரியர், ஊழியர்களை, பிற கல்லுாரிகளுக்கு மாற்ற, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்காக, இன்று ஆசிரியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவும், பிப்., 3 வரை, கல்லுாரிகள் முன் ஆர்ப்பாட்டம், பிப்., 11ல், சென்னையில் உண்ணாவிரதம், பின் மறியல் போராட்டம் நடத்த, அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்