January 21, 2017

பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..


ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
சென்னைப் பல்கலை.யில்...: தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 21, 22) நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் ஜனவரி 28, 29-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

பிற தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வழக்கம்போல நடைபெறும் என சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறந்தநிலைப் பல்கலை.யில்...: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மார்ச் 19, 25-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்