தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்புப் பட்டியலில் இருந்து வந்தது. ஆனால், இன்று பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது.
பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம், கோரிக்கை, வலியுறுத்தல் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்