January 04, 2017

15 வயது பூர்த்தியடையாமல் ஆதார் அட்டை பெற்றவர்கள் 15 வயது பூர்த்தியானவுடன் மீண்டும் ஆதார் பதிவு (பயோமெட்ரிக் தகவல்கள்) தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

💳 ஆதார் அட்டை பதிவு செய்துள்ள சிறுவர்/ சிறுமிகளுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

🔶 'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழி பதிவு போன்ற, 'பயோமெட்ரிக்' தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

📝 அவரது அறிக்கை:



🔷 தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார் எண் வழங்க, தமிழகம் முழுவதும், 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

🔶 இவற்றை, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்து வருகின்றன.

🔷 இம்மையங்களில், 2016 -  அக்டோபர் 1 முதல், டிசம்பர் 31 வரை, 9.91 லட்சம் பேருக்கு, ஆதார் எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

🔶 மத்திய அரசு வெளியிட்ட, ஆதார் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை, 15 வயது பூர்த்தியடைந்த நாளில் இருந்து, இரு ஆண்டுகளுக்குள், மீண்டும் கட்டாயமாக அளிக்க வேண்டும்.

🔷 எனவே, இன்று முதல், நிரந்தர சேர்க்கை மையங்களில், 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை அளிக்கலாம்; இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது.

இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்