December 14, 2016

ஏர்செல் வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!

AIRCEL 

தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட்  டேட்டா சலுகைகளை வழங்குபடியான புதிய சலுகை அறிவிப்புகளை  ஏர்செல் வெளியிட்டுள்ளது.


இன்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏர்செல் வாடிக்கையாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள RC 249 என்ற ரீசார்ஜை பயன்படுத்துவதன் மூலம் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.  அதேபோல் அன்லிமிட்டட்  2G டேட்டாவை பயன்படுத்தலாம். 4G  வசதி உள்ள அலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு மேலும் 1.5 GB  டேட்டா கூடுதலாக கிடைக்கும்.இதற்கான வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

இதனைப் போலவே RC 14 என்ற மற்றொரு ரீசார்ஜும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலிடிட்டி ஒருநாள் மட்டுமே ஆகும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்