December 26, 2016

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்


'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகமாகிறது. இதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜே.இ.இ., - மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகி உள்ளது.



இந்த வரிசையில், ரயில்வே வாரியம் நடத்தும், பணியாளர் நியமன தேர்வுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
'அடுத்து அறிவிக்க உள்ள, ரயில்வே வாரிய தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அதற்கு இப்போதே, ஆதார் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்