December 14, 2016

உ.பி. அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல்


லக்னோ:உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஆங்கில புத்தாண்டு போனசாக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், "ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். எனினும் இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்