வங்க கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு பின், கரையை கடக்கும் எனவும், காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், எதிர்பார்த்த மழையை
தராமல், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நிலத் தடி நீர் மட்டம் சராசரியாக, 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. அதனால், மழை வருமா; வளம் தருமா என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தராமல், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நிலத் தடி நீர் மட்டம் சராசரியாக, 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. அதனால், மழை வருமா; வளம் தருமா என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
1 2 3 இந்நிலையில், வங்க கடலின் தென் கிழக்கில், இலங்கை அருகில், நான்கு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று காலை புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயலுக்கு, 'நடா' என, அரபு மொழி பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூறாவளி இது குறித்து, இந்திய வானிலையின் புயல் ஆய்வு மைய விஞ்ஞானி, நரேஷ் குமார், சென்னை புயல் எச்சரிக்கை மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் வெளியிட்ட எச்சரிக்கை: நேற்று பகல், 12:00 மணி நிலவரப்படி, வங்க கடலில், இலங்கையின் திரிகோணமலையிலி ருந்து, வட கிழக்கில், 350 கி.மீ., துாரத்திலும்; சென்னையில் இருந்து தென் கிழக்கில், 590 கி.மீ., துாரத்திலும்; புதுச்சேரியிலி ருந்து தென் கிழக் கில், 560 கி.மீ., துாரத்திலும், புயல் நகர்ந்து கொண்டிருந்தது. மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில், கரையை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்னும் வலுப்பெற்று, 2ம் தேதி அதிகாலையில், அதாவது, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு பின், வடக்கு கடலோர பகுதியில், கடலுார் அருகில், வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே, அதிக பட்சம், 90 கி.மீ., வேகத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. கடலில், 35 முதல், 45 நாட்டிகல் மைல் சுற்றள வுக்கு, சூறாவளி காற்று இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், இன்று முதல் காற்றுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில், இன்று அதிகாலை முதல், 65 கி.மீ., வேகத்தில் சூறா வளி காற்று வீச வாய்ப்புள்ளது. கடலில், உயரமான அலைகள் எழும்; கொந்தளிப் பாக இருக்கும். எனவே, கடலோர மாவட்டங் களில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டும். , இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
தேர்வுகள் ரத்து புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகப்பட்டி னம என, ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி களுக்கு, இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், வானுார், மரக் காணம் தாலுகா பள்ளிகளுக்கும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல் லுாரிகளில், இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பில் இருந்து தப்ப, மக்கள் முன்னெச்சரிக் கையுடன் இருப்பது நல்லது. பாதிக்கப்படும் பகுதிகள் புயல் நேரடியாக தாக்க வாய்ப்புள்ள பகுதிகளை, இந்தியபுயல் முன் எச்சரிக்கை மையம் பட்டியலிட்டுள்ளது. *கடலுார் மாவட்டம்: குமரப்பேட்டை, மாதவ பள்ளம், பூச்சிமேடு, திருச்சேபுரம், தம்மம் பேட்டை, ரெட்டியார் பேட்டை, நொச்சிக்காடு, ராசாப்பேட்டை, சோத்திக்குப்பம், கடலுார், புதுக்குப்பம், மணப்பேடு, பிச்சாவரம், முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை. *
நாகை மாவட்டம்: சுனாமி நகர், வழுத்தலைக்குடி * விழுப்புரம் மாவட்டம்: சோலை நகர் (புதுச்சேரி அருகில்) * புதுச்சேரி: புதுக்குப்பம், சின்ன வீர்மா பட்டினம், புதுச்சேரி ஆசீர்வதிக்குமா; ஆபத்தை தருமா? வங்க கடலில் புதிய புயலுக்கு, 'நடா' என, ஏமன் நாடு வழங்கிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரபு மொழியில், ஆசீர்வதிக்கப் பட்ட வள், வாழ்த்தப்பட்டவள், அழைப்பு, பிரார்த் தனை ஆகிய அர்த்தங்கள் உள்ளன. இப்புயல், கரையை கடக்கும் போது, கடலில் இருந்து வந்த வேகத் தில், நிலப்பகுதிக்குள் நுழைந்து, ஆபத்தை ஏற்படுத்துமா அல்லது ஆசீர்வதிக்கப் பட்டவள் என்ற பெயருக்கு ஏற்ப, வலு குறைந்து, சில நாட்களுக்கு மழையை கொடுக்குமா என்பது, இன்று தெரியும். மின் வாரியம் 'அலர்ட்' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மின் வினி யோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழி யர்கள், 'அலர்ட்' செய்யப்பட்டுள்ளனர். தமிழகத் தில், 2015 இறுதியில் பெய்த கன மழை யால், துணை மின் நிலையங்களில், தண்ணீர் புகுந்து, மின் சாதனங்கள் நாசமாகின. இதனால், சென்னை, கடலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், மின் தடை ஏற் பட்டு, இருளில் மூழ்கின. நடப்பு மழை சீசனில், மின் சாதனங் களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், முன்னெச்சரிக்கை நடவடிக் கை களை மேற்கொண்டுள்ளது. ஆனால், இதுவரை மழை பெய்யவில்லை. தற்போது, வானிலை ஆய்வு மையம், தமிழகத் தில் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று, முதல் பரவலாக மழை பெய்யும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மின் வினியோக ,பணியில்,கவனமாக இருக்குமாறு, மின் ஊழி யர்களை, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கலெக்டர்களுக்கு உத்தரவு கடந்த ஆண்டில், வானத்து சுனாமி போல் கொட்டிய மழையால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள், வெள்ளத்தில் தத்தளித்தன; 100க் கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். பெரும் சேதம் ஏற்பட்டது. அது போன்ற நிலை ஏற்படா மல் இருக்க, அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவுரைகள்? * கடலோர மாவட்டங்களில், மழையால் பாதிக் கப்படும் மக்களை தங்க வைக்க, புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்l தேங்கும் மழைநீரை அகற்ற தேவையான இயந்திரங்களையும், படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் * புயல் பாதுகாப்பு மையம், பள்ளிகளின் சாவிகள், பேரிடர் குழுவிடம் இருக்க வேண்டும்.
மக்களை தங்க வைத்தால், அவர்களுக்கான உணவு வழங்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும் * பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மின் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், விடுப்பு இன்றி பணிக்கு வர வேண்டும் * மின் தடையால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை வரும் என்பதால், குடிநீர் தொட்டிகளில், குளோரின் கலந்த குடிநீரை தேவையான அள வில், நிரப்பி வைக்க வேண்டும் * பாதுகாப்பு மையங்களாக தேர்வான பள்ளிகள், புயல் பாதுகாப்பு மைய சாவிகளை, மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் கள், எப்போதும், தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அரசு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விரைந்தது தேசிய மீட்பு குழு புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில், நிவாரணப் பணிகள் செய்ய, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. இங்கிருந்து தலா, இரண்டு குழுவினர் கடலுா ருக்கும், நாகப்பட்டினத்திற்கும், சென்னைக்கும் நேற்று மாலை, 5:00 மணிக்கு சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும், 40 பேரிடர் மீட்பு வீரர்கள் உள்ளனர்.
இவர்கள் உயிர் காக்கும் முதலுதவி பொருட்கள், வெள்ளத்தில் சிக்கி யவர்களை மீட்கும் ரப்பர் படகுகளுடன் சென்றுள்ளனர். தேவைப்பட்டால், மேலும் பல குழுவினர் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். முத்துபாண்டி அரக்கோணம், தேசிய பேரிடர் மீட்பு படை மைய தகவல் தொடர்பு அலுவலர் அவசர தொடர்புக்கு மாநில பேரிடர் மேலாண்மை மையம் 1070 மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 சென்னை தவிர, பிற மாவட்டங்களில், எஸ்.டி.டி., எண்ணையும் சேர்த்து, தொடர்பு கொள்ள வேண்டும் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை 044 - 2435 0496 , 2433 4811 94443 40496, 93614 82899 அவசர கால ஆம்புலன்ஸ் 108 மின் துறை தொடர்பு எண் 1912 l
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்