December 30, 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்...


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்.


நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும்.வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல்செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்