December 24, 2016

ஜனவரி 1-ம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரொக்கமில்லா மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்.

💳 கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்க பணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



Ⓜ இதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🚆 இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி முதல் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது.

🚈 இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய உயர் அதிகாரி கூறுகையில், ரோகினி, மயூர் விகார், திலக் நகர், நொய்டா செக்டார் உள்ளிட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை அமலுக்கு வருகிறது.

🚊 இந்த ரயில் நிலையங்களில் பொது மக்கள் பேடிஎம் உள்ளிட்ட மொபைல் வாலட்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

🚇 ரயிலில் பயணம் செய்ய டோக்கன் வாங்கவும், ஸ்மார்ட் கார்டு வாங்க அல்லது ரீசார்ஜ் பேடிஎம், கியூஆர் கோட் மூலம் பணம் செலுத்தலாம்.

🚋 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கனவே 70% பயணிகள் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்