டெல்லி : ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.
2017 ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை
அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் பரிவர்த்தனைக்கு எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய எண், பயோ மெட்ரிக் அடையாளம் ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வைத்து இருக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்