November 28, 2016

₹50, ₹100 நோட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். - மத்திய அரசு அறிவிப்பு.

💵 ₹50, ₹100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.


💷 கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் அறிவித்தார்.

💶 மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.

💷 இதன் தொடர்ச்சியாக ₹50 மற்றும் ₹100 நோட்டுகளும் ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது.

💴 வதந்தியை மறுக்கும் வகையில், 'நோட்டு வாபஸ் கட்டுக்கதை அழிப்பு' என்ற தலைப்பில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

💴 ₹50, ₹100 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மேலும்  ₹50, ₹100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை.

💶 இப்படிப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

💷 இந்த நோட்டுகள் அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்' என்று கூறப்பட்டு உள்ளது.

💵 புதிதாக வெளியிடப்பட்டு உள்ள ரூபாய் நோட்டுகளில் 'சிப்' பொருத்தப்பட்டு உள்ளது என்று வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்