விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் எழுதினார். தமிழகம் முழுவதும் 5,451 காலியிடங்களுக்கு 301 மையங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும்
குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.
இவரைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதும் அகிலாண்டேஸ்வரி பி.இ.(இ சி இ) முடித்துள்ளார். இவரது கணவர் பிரதீப் என்கிற தமிழரசன் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மேம்ஸில் பணியாற்றிவருகிறார்
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்