November 30, 2016

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


         இதுதொடர்பாக பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். தென்மேற்கு காற்று திசைமாறிய காரணத்தால் வடகிழக்கு பருவமழை தாமதமானதாக குறிப்பிட்ட அவர், மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்