October 01, 2016

பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க உத்தரவு

அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு..
T

சேலம்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயேபோலிச்சான்றிதழ் கொடுத்து,ஒன்றிரண்டு மாணவர்கள் பள்ளிகளில்பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்துசேலம் மாவட்டத்தில்பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களின்பத்தாம் வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறியபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுபோலிச்சான்றிதழ் கொடுத்துஆசிரியர் பணியில் பலரும் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதுசேலம் மாவட்டத்தில்பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் போலிச்சான்றிதழ் மூலம் மோசடி செய்துபடிப்பை தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
கல்வியாண்டில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள்அதே கல்வியாண்டில் படிப்பை தொடர சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் முடிவு வெளியாக ஜூலை மாதம் ஆகிவிடுவதால்மதிப்பெண் பட்டியல் வழங்கும் முன்பேஅம்மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை நடத்த வேண்டியுள்ளது. 
இதில்மதிப்பெண் சான்றிதழ்களில்மதிப்பெண்ணை மாற்றியமைத்துபோலிச்சான்றிதழ்களை உருவாக்கி,பல மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கப்படும் போதுமதிப்பெண் பட்டியலை சோதிக்கும் போதுதனியார் பள்ளியில் ஒரு மாணவர் சிக்கியுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூடபோலிச்சான்றிதழ் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரிஅனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்பிளஸ் 1, பிளஸ் படிக்கும் அனைத்து மாணவர்களின்பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்ப்பதுடன்முந்தைய பள்ளி தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி,அச்சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். 
உண்மையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத எந்த மாணவரும்பிளஸ் 1, பிளஸ் வகுப்புகளில் படிக்க கூடாது எனகூறியுள்ளார்.

4 comments:

Unknown said...

நல்ல தகவல்

Unknown said...

நல்ல தகவல்

kalvikathir said...

நன்றி

kalvikathir said...

நன்றி

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்